உடன்பிறப்பே!
"தம்பி!"
"எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களா அண்ணா?"
"பின் இல்லையா? என் இதயத்தை உன்னிடம் அல்லவா கொடுத்துவிட்டு வந்திருந்தேன்? (சிரித்துக்கொண்டே)"
"அதைக்கொண்டு வர நான் பட்ட பாட்டையும் பார்த்திருப்பீர்கள்தானே அண்ணா?"
"நிச்சயமாக. நீ பிறவிப்போராளியடா. இந்தக் கொடுங்கோலர்களிடம் நான் இதை எதிர்பார்த்ததுதான் கருணா!"
"ஆனால் இந்த மக்களுக்கு நம் நாட்டின் எதிரி யார் என்பதை விளங்கிக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது அண்ணா."
"காலம் உணர்த்தும் கருணா. நீ கவலைகொள்ளாதே. திராவிடம் நிலைத்து நிற்கும்வரை எதிரிகளை மக்கள் உணர்ந்துகொண்டுதான் இருப்பார்கள்!"
"நீங்கள் விட்டுப்போன வேலையை சரியாகச் செய்திருப்பதாய் ஒரு சிறிய திருப்தி இருக்கிறது அண்ணா. அது போதும்."
"என் ஆயுளுக்கும் சேர்த்தல்லவா நீ செய்திருக்கிறாய்! என் தம்பியாய் அல்ல. என் மகனாக உன்னை நினைத்துப் பார்க்கிறேன் கருணா!"
"நன்றி அண்ணா. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் என் கவலை!"
"அந்தக் கவலையும் உனக்கு வேண்டாம். நம் பிள்ளைகளின் நெருப்பு எனக்குத் தெரியும். அது நான் உனக்குக் கொடுத்து வந்தது. நீ அவர்களுக்குக் கொடுத்து வந்தது. அது வெறும் நெருப்பு இல்லை கருணா. சூரியன். அணைக்க முடியாது!"
"நன்றி அண்ணா! உங்களை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா?"
❤
- பாலகுருநாதன் முருகேசன்